Freitag, Dezember 10, 2004

எலிசபெத் ரெய்லர்

மரம் பழுத்தால் வெளவாலை வாவென்று கூவி இரந்தழைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு பெண்ணிடம் அழகும் இளமையும் இருக்கும் போது அவள் காலடியில் கூட விழத் தயாராக இருப்பார்கள் ஆண்கள்.

திரையுலக தேவதை எலிசபெத் ரெய்லர் இன்று தனிமையில் வாடுகிறார். அன்புக்காக ஏங்குகிறார். அவரது தோலில் சுருக்கங்கள் விழ ஆண்களும் அவரை விட்டுப் போய் விட்டார்கள்.

தற்போது 72வயதுகளைத் தொட்டிருக்கும் எலிசபெத் ரெய்லர், சமையற்கலைஞர், நடிகர், தயாரிப்பாளர், பாடகர், அரசியல்வாதி, கட்டிடத் தொழிலாளர் என சமூகத்தின் பல மட்டங்களிலும் இருந்தும் எட்டுத் தடவைகள், ஏழு ஆண்களைத் திருமணம் செய்து கொண்டார். எட்டுத் தடவைகள் விவாகரத்தும் செய்து கொண்டார். இதில் பிரித்தானிய நடிகர் ரிச்சர்ட் பற்றனை மட்டும் இரண்டு தடவைகள் திருமணம் செய்து கொண்டார்.

இவரது அழகும் பட்டுப்போன்ற கவர்ச்சியான சிரிப்பும் ஆண்களை இவரது காலடியில விழ வைத்தன. ஆனால் இன்று..? இந்த வயதில் தனிமை வந்திருக்கிறது. பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் நண்பர்கள் உறவுகள்.. என்று பலரும் அவரைச் சூழ்ந்திருந்தாலும் நெருக்கமாக இருந்து கண்ணீரைத் துடைத்து விடவோ, அணைத்துக் கொள்ளவோ வாழ்க்கைத் துணையென்ற ஒன்று, இன்று அவருக்கு இல்லை.

இவரது இன்றைய நெருங்கிய நண்பன் இவர் வளர்க்கும் 12வயது நிரம்பிய சிறிய வகை நாய் ஒன்றே. இவரது படுக்கையின் ஒரு தலையணையில் உரிமையுடன் படுதுத்துறங்கும் அந்த நாயின் பெயர் சுகர்.

உடல் தளர்ந்து முகத்தில் சுருக்கங்கள் விழுந்து தளர்ந்து போயிருக்கிறார். இதயம் பலவீனப்பட்டு இருக்கிறது. முதுகெலும்பு வளைந்து நின்று முதுமையை அப்பட்டமாகச் சொல்கிறது. ஓடித் திரிந்த கால்கள் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாமல் பலமிழந்து நிற்கின்றன. இவரைச் சுற்றி வைத்தியர்கள் எப்பொழுதும் இருக்கிறார்கள். ஆனாலும் இவரால் முதுமையை மட்டும் வெல்ல முடியவில்லை.

இருந்தாலும் "மிக அழகிய இனிமையான நினைவுகள் என்னிடம் உள்ளன.
அந்த நினைவுகளே முதுமையை வெல்ல எனக்குப் போதும்." என்கிறார் எலிசபெத் ரெய்லர்.

சந்திரவதனா
2.12.2004

Montag, November 29, 2004

Fred Hale Senior தனது 113வது வயதில் இறந்து விட்டார்.

உலகிலேயே அதிக வயதான ஆண் Fred Hale Senior தனது 113வது வயதில் இறந்து விட்டார்.

இவர் 1890ம் ஆண்டு மார்கழி மாதம் 1ந் திகதி Maine இல் பிறந்தார். 5.3.2004 இல் கின்னஸ் புத்தகத்தில் உலகில் அதி கூடிய வயதான ஆண் என்ற இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

109வயது வரை தான் பிறந்த நகரிலேயே வாழந்து வந்த இவர், அதன்பின் தனது மகன் வாழும் நியூயோர்க்கில் உள்ள Dewitt க்கு இடம் மாறியிருந்தார்.

அங்கு நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக தனது 114வது பிறந்தநாளுக்கு 12 நாட்கள் முன்பாக 19.11.2004 அன்று, நித்திரையிலேயே இறந்து விட்டார்.

தற்போதைய அதி கூடிய வயதான ஆண் மனிதர் Hermann Dörne. இவர் யேர்மனியின் Düsseldorf நகரில் வசிக்கிறார். இவருக்கு வயது 111.
ஆனால் இதே வயதில் இன்னும் 26 பெண்கள் வாழ்கிறார்கள் என நியூயோர்க்கைச் சேர்ந்த முதுமை பற்றிய ஆராய்ச்சிக்குழு அறியத் தந்துள்ளது.

Donnerstag, Oktober 28, 2004

எறும்பு போல் சுறுசுறுப்பாய்...?


எறும்புகள் மிகவும் சுறுசுறுப்பானவை எனத்தான் நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

அப்படியில்லையென Biologe pro.Jurgen Heinz அடித்துக் கூறுகிறார்.

எறும்புகள் ஐந்து நிமிடங்கள் வேலை செய்தால் 25 நிமிடங்கள் ஓய்வெடுக்கின்றனவாம். அவரது ஆராய்சியின் படி, மனிதர்களை விட எறும்புகள் குறைவாகத்தான் வேலை செய்கின்றனவாம்.

- தகவல் - HT-Schwaebisch Hall 15.7.1999 -

எனது கருத்து :
இனி யாரும் யாருக்கும் சொல்லாதீர்கள்
"எறும்பு போல் சுறுசுறுப்பாய் இரு" என்று

Donnerstag, Mai 20, 2004

குழந்தை விரைவில் கதைக்கத் தொடங்குவதற்கு

ஓரு குழந்தை விரைவில் கதைக்கத் தொடங்குவதற்கும், கதைக்கப் பிந்துவதற்கும் குழந்தையின் புத்திசாலித்தனம் காரணமல்ல என அமெரிக்க Yale பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Steven Reznik கூறுகிறார்.

ஓரு குழந்தை விரைவில் கதைக்கத் தொடங்குவதற்கும், கதைக்கப் பிந்துவதற்கும் காரணம்
ஒன்று - பரம்பரை
இரண்டாவது - தாய் தந்தையர்
என அவர் கூறுகிறார்.

தாய் தந்தையர் பிள்ளையுடன் எவ்வளவு தூரம் கதைக்கிறார்களோ அவ்வளவு விரைவில் பிள்ளைகள் கதைக்கத் தொடங்குவார்களாம்.

(Fuer Sie என்ற யேர்மனிய மாதசஞ்சிகையிலிருந்து)

Dienstag, Mai 18, 2004

Cartoon எப்படி வந்தது..?

இன்று பத்திரிகைகளில் வரும் Cartoon (கேலிச்சித்திரம்) எப்படி வந்தது என்று தெரியுமா?

இத்தாலி மொழியில் Cartoon என்பது கெட்டியான காகிதத்தைக் குறிக்கும்.
கெட்டியான காகிதங்களில் தான் அப்போது அங்கே ஓவியங்கள் வரைவார்கள்.

1921 ம் ஆண்டில் பிரிட்டனின் புதிய பாராளுமன்றக் கட்டடத்தை அலங்கரிக்க ஓவியர்களிடையே போட்டி ஒன்று நடாத்தப் பட்டது. அந்தப் போட்டிக்காக (கெட்டியான காகிதங்களில்) வரையப் பட்ட பல ஓவியங்கள் நிராகரிக்கப் பட்டன.

கேலிச் சித்திரங்கள் போன்று இருந்த - நிராகரிக்கப் பட்ட சில ஓவியங்களை பஞ்ச் என்ற பத்திரிகை ஒன்று பஞ்ச் Cartoon என்ற தலைப்பில் ஒவ்வொன்றாகப் பிரசுரித்தது.

காலப் போக்கில் இவ்வித கேலிச்சித்திரங்களுக்கு Cartoon என்ற பெயர் நிலைத்து விட்டது.

Dienstag, Mai 11, 2004

கர்ப்பிணியா இல்லையா..? கண்டு பிடிக்க ...!

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே - ஒரு பெண் கர்ப்பிணியா இல்லையா என்பதைக் கண்டு பிடிக்க எகிப்தியர்கள் கையாண்ட சில சுவாரஷ்யமான முறைகள்.

1 - கோதுமை அல்லது பார்லி தானியத்தின் மீது சம்பந்தப் பட்ட பெண்ணையும்
அவள் கணவனையும் சிறுநீர் கழிக்கச் சொல்லுவார்கள். பெண்ணினுடைய
தானியம் முதலில் முளை விட்டால் அவள் கர்ப்பிணி என்று உறுதி
செய்வார்கள்.

2 - ஒரு சிறிய நாடாவைக் கொளுத்தி அதைப் பெண்ணின் மூக்கினருகே
கொண்டு செல்வார் மருத்துவர். எரியும் நாற்றம் தாங்காமல் அந்தப் பெண்
மயங்கி விழுந்தால் அவள் கர்ப்பிணி என்று முடிவு கட்டுவார்.

3 - கர்ப்பிணிச்செடி என்று பெயரிட்டு ஒரு தாவரத்தை வளர்த்து வந்தனர். சில
எகிப்திய மருத்துவர்கள். மாலையில் இந்தச் செடி மீது கர்ப்பிணிப் பெண்
சிறுநீர் கழிக்க வேண்டும். காலையில் செடி வாடாமல் இருந்தால் அவள்
கர்ப்பிணி என்பது உறுதி!

இந்தச் சோதனையை விளக்கும் அந்தக் காலத்துக் கையெழுத்துப் பிரதி இன்றும் லண்டன் மியூசியத்தில் உள்ளதாம்.

Mittwoch, Mai 05, 2004

பொங்கல் வாழ்த்து

பொங்கல் வாழ்த்து அனுப்பும் வழக்கம் 1928ம் ஆண்டு அறிஞர் பெரியசாமித் தூரனால் ஏற்படுத்தப்பட்டது. அவர் பனங்குருத்து ஓலைகளை நறுக்கி, திரு.வி.க, கல்கி போன்றவர்களுக்கு பொங்கல் வாழ்த்தை அனுப்பி வைத்தார்.
திரு.வி.க அவர்கள் தமது நவசக்தி நாளேட்டில் அதை வெளியிட்டு
இது போல் அனைவரும் பொங்கல் வாழ்த்தை தயாரித்து அனுப்புங்கள்
என்று கேட்டுக் கொண்டார்.

கல்கண்டு இதழிலிருந்து
சந்திரவதனா.

Dienstag, April 27, 2004

கறுப்பு விதவை

ஏறக்குறைய 1செ.மீ அளவுள்ள பெண்சிலந்தி ஒன்றுக்கே இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. கறுப்பு நிறம் கொண்ட இச்சிலந்தியின் முதுகில் பல்வேறு எண்ணிக்கையில் சிவப்புப் புள்ளிகள் காணப்படும்.

இவை அமெரிக்காவில், வெப்பம் சூழ்ந்த இடங்களிலும், புற்கள், புதர்கள் நிறைந்த இடங்களிலும், சோளப்பண்ணைகளிலும், மனிதநடமாட்டமில்லாத பாழடைந்த வீடுகளிலுமே பெரும்பான்மையாகக் காணப்படுகின்றன.

தன்னைவிட 5மடங்கு பருமனான உயிரினத்தை ஒரேநேரத்தில் உண்ணக்கூடிய சக்தியை இச்சிலந்தி கொண்டுள்ளது. இது மனிதர்களுக்குக் கடித்தால், பத்திலிருந்து இருபது நிமிடங்களுக்குப் பின்னரே மனிதர்கள் இதன் வலியை உணர்ந்து கொள்வார்கள்.
இதனுடைய நச்சுத்தன்மை உடலில் பரவுவதால் செங்குருதிச் சிறுதுணிக்கைகள் பாதிக்கப்படுகின்றன. இதனால் கடுமையான வலி உண்டாகி ஒருவித பய உணர்வு ஏற்படும்.
சிலர் இச்சிலந்தி கடித்ததால் இரத்தத்தில் நச்சுத்தன்மை ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர்.

இவ்வகைச் சிலந்திகள் உடல் உறவு கொண்டபின் பெண்சிலந்தி ஆண்சிலந்தியைக் கொன்று தின்றுவிடும். எனவேதான் இக்கறுப்பின சிலந்திகளுக்கு கறுப்பு விதவை எனப் பெயர் வந்தது.

Montag, März 22, 2004

விளம்பரத் துறை

முதன் முதல் விளம்பர நோட்டீஸ் ஒட்டியவர்கள் ஜேர்மனியர்கள். 1466 ம் ஆண்டு தெருச்சுவர்களில் விளம்பர நோட்டீஸ்களை ஒட்டி விளம்பரத் துறையை ஆரம்பித்து வைத்தார்கள். 1786 ம் ஆண்டு வில்லியம் ரெய்லர் என்ற இங்கிலாந்தைச் சேர்ந்தவரால் விளம்பரக் கொம்பனி முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டது. 1941 ஜுலை 1 ம் திகதி முதல் விளம்பரம் தொலைக் காட்சியில் காட்டப்பட்டது. காட்டப்பட்ட பொருள் கை மணிக்கூடு.

Samstag, März 20, 2004

நாய்தான் நமக்கு சீனியர்.

நாய்தான் அழகுப் போட்டியில் நமக்கு சீனியர்.
முதல் முதல் அழகுப் போட்டி நாய்களுக்கிடையில் 1859 ம் ஆண்டு பிரித்தானியாவில் நடைபெற்றது.
அதற்குப் பிறகு 29 ஆண்டுகள் கழித்துத்தான் மனிதர்களுக்கிடையிலான அழகுப் போட்டி பற்றிய எண்ணம் யாருக்கோ வந்தது.
முதல் முதலாக மனிதர்களுக்கிடையிலான அழகுப் போட்டி 1988 இல் பெல்ஜியத்தில் நடைபெற்றது.

Freitag, März 19, 2004

புகையிலைக் காற்றை முதல் சுவாசமாக...

குழந்தை இறந்து விட்டதாக எண்ணி அதை அப்படியே கிடத்தி விட்டுப் போய் விட்டாள் மருத்துவத்தாதி.

நெருங்கிய உறவினரான மருத்துவர் - சுருட்டுப்பிரியர் - நம்பிக்கை இழக்காமல் குழந்தையின் வாயில் தனது வாயை வைத்து மூச்சைப் பலக்க ஊதினாரோ இல்லையோ குழந்தை பிழைத்துக் கொண்டது.

புகையிலைக் காற்றை முதல் சுவாசமாக இழுத்துப் பிறந்த அந்தக் குழந்தைதான் - பிக்காஸோ என்ற modernart மேதை.

Sonntag, Februar 08, 2004

Mit Hausmitteln schnell gesunden

Erkältung
Gegen Kopfschmerz und Triefnase muss schnelle Hilfe her: Den Gang zum Arzt können Sie sich mit der Anwendung von Hausmitteln jedoch häufig sparen. Tipps für alle, die schnell wieder genesen möchten.

Wadenwickel und heiße Milch mit Honig sind vielen noch aus Kindertagen in Erinnerung. Heute stehen die alten Hausmittel gegen Erkältung und Grippe wieder hoch im Kurs. Die Vorteile: Sie sind einfach aber effektiv, sie haben keine Nebenwirkungen, und vor allem sind sie deutlich preiswerter als Mittel aus der Apotheke. Vor allem bei Erkältungen mit Schnupfen, Kopf- und Gliederschmerzen sind Hausmittel die richtigen Maßnahmen. Sind Fieber & Co. jedoch nach einigen Tagen noch nicht abgeklungen, sollte man vorsichtshalber zum Arzt gehen.

Wickel und andere Sofortmaßnahmen
Ein altbewährtes Mittel gegen Erkältungen sind verschiedene Wickel. Wadenwickel beispielweise senken das Fieber, Brustwickel helfen bei fieberhafter Bronchitis und bei Lungen- und Rippenfellentzündungen, Halswickel bei akuten Halsentzündungen. Den Genesungsprozess bei Erkältungen beschleunigen außerdem ätherische Öle auf Basis von Eukalyptus, Lavendel oder Zedernholz, die eingeatmet werden. Das Kratzen im Hals kann mit Gurgeln einer Salzlösung gemildert werden. Wichtig ist außerdem: Warme und frische Luft in den Räumen, die durch Wasserschalen oder nasse Tücher auf den Heizkörpern eine ausreichende Luftfeuchtigkeit erzielt.

Quelle - ratgeber.ARD.de