Freitag, September 01, 2006

பெரிய இறால்களைத் தவிருங்கள்

கடல் உணவுகள் உடல் நலத்துக்கு மிகவும் நல்லவைதான். ஆனாலும் நாம் நினைப்பது போல விற்பனைக்கு வரும் அத்தனை கடலுணவுகளுமே இயற்கை முறையில் கடலில் வளர்ந்தவை இல்லை என ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது.

ஏறக்குறைய 20 வீதம் கடலுணவுகள் - கடலிலிருந்து - குளங்களுக்கும் செயற்கை முறையான நீர்த்தொட்டிகளுக்கும் இடம் மாற்றப் பட்டு, மரம் செடிகளுக்கு பசளை இடுவது போன்று மருந்துகள் கலந்த செயற்கை உணவுகள் கொடுக்கப் பட்டு வளர்க்கப் பட்டவையே எனத் தெரிய வந்துள்ளது.

கடந்த வருடத்துக்கு முந்திய வருடம் கோடைகாலப் பகுதியில் விற்பனைக்கு வந்த அத்தனை சீன இறால்களும் நண்டுகளும் விற்பதற்குத் தடை செய்யப் பட்டு வெளியேற்றப் பட்டனவாம்.

காரணம் - அந்த இறால்களுக்கும் நண்டுகளுக்கும் மனிதரின் உடலுக்குக் கெடுதி விளைவிக்கக் கூடிய தடைசெய்யப் பட்ட Antibiotic ஏற்றப் பட்டிருப்பது கண்டு பிடிக்கப் பட்டதாம்.

இந்த Antibiotic க்கு மனிதரின் எலும்புமச்சையை பழுதடைய வைக்கும் தன்மை உள்ளது தற்போது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

அதன் காரணமாக தற்போது சீனாவிலிருந்து ஐரோப்பியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் இறால் மீன் போன்றவற்றை பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னரே இறக்குமதிக்கு அனுமதிக்கிறார்களாம்.

இருந்தாலும் இறால்களை வாங்கும் போது அதீதமான பருமனுள்ள பெரிய இறால்களை தவிர்க்கும் படி ஐரோப்பிய யூனியன் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. மருந்து ஏற்றப் பட்ட இறால்கள்தான் அப்படி பெரிதாக வளர்கின்றனவாம்.

Vital - யேர்மனிய சஞ்சிகையிலிருந்து