Dienstag, Mai 11, 2004

கர்ப்பிணியா இல்லையா..? கண்டு பிடிக்க ...!

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே - ஒரு பெண் கர்ப்பிணியா இல்லையா என்பதைக் கண்டு பிடிக்க எகிப்தியர்கள் கையாண்ட சில சுவாரஷ்யமான முறைகள்.

1 - கோதுமை அல்லது பார்லி தானியத்தின் மீது சம்பந்தப் பட்ட பெண்ணையும்
அவள் கணவனையும் சிறுநீர் கழிக்கச் சொல்லுவார்கள். பெண்ணினுடைய
தானியம் முதலில் முளை விட்டால் அவள் கர்ப்பிணி என்று உறுதி
செய்வார்கள்.

2 - ஒரு சிறிய நாடாவைக் கொளுத்தி அதைப் பெண்ணின் மூக்கினருகே
கொண்டு செல்வார் மருத்துவர். எரியும் நாற்றம் தாங்காமல் அந்தப் பெண்
மயங்கி விழுந்தால் அவள் கர்ப்பிணி என்று முடிவு கட்டுவார்.

3 - கர்ப்பிணிச்செடி என்று பெயரிட்டு ஒரு தாவரத்தை வளர்த்து வந்தனர். சில
எகிப்திய மருத்துவர்கள். மாலையில் இந்தச் செடி மீது கர்ப்பிணிப் பெண்
சிறுநீர் கழிக்க வேண்டும். காலையில் செடி வாடாமல் இருந்தால் அவள்
கர்ப்பிணி என்பது உறுதி!

இந்தச் சோதனையை விளக்கும் அந்தக் காலத்துக் கையெழுத்துப் பிரதி இன்றும் லண்டன் மியூசியத்தில் உள்ளதாம்.