பசுமையான காய்கறிகள், பழங்கள், பருப்புகள் ஆகியவை புற்றுநோயை தடுப்பது மட்டுமல்ல, குணப்படுத்தும் என்று மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். வெங்காயத்தை நாம் சாதாரணமாக நினைக்கிறோம். அவ்வப்போது வெங்காயத்தைச் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. புற்றுநோய் வருவதற்கு காரணமான Carcinogen என்கிற மூலப் பொருளை எதிர்த்துப் போராடும் சக்தி வெங்காயத்திற்கு அபரிமிதமாக உண்டு. அதே போல பூண்டுக்கு கேன்சரை விரட்டும் சக்தி உண்டு. சோயா பீன்ஸ், சோயா மில்க், சோயா மாவு இவை எல்லாவற்றிலுமே கார்ஸினோஜினை நுழையாமல் தடுத்து நிறுத்தும் வல்லமை உள்ளது. மார்பகப் புற்று நோயுள்ளவர்களுக்கு முட்டைக் கோஸ், காலிஃப்ளவர் ஆகிய காய்கறிகளைச் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்வது நல்லது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம், நம்முடைய இந்தியன் ஸ்டைலில் மிக அதிகமாக வேக வைக்கக் கூடாது. வெளிநாட்டு உணவு போல பச்சையாகவோ அல்லது மிதமாக வேக வைப்பது சிறந்தது. பப்பாளிப்பழம், மாம்பழம், செர்ரி பழங்கள், பிளம்ஸ், தர்பூசனி ஆகிய பழங்களை ரெகுலராகச் சாப்பிடுவது கேன்சர் நோயாளிகளுக்கு நல்லது.
nantri-Kumutham
Freitag, Oktober 31, 2003
Samstag, Oktober 04, 2003
தூக்கம் பற்றிய சில தகவல்கள்
நாள் முழுவதும் தொடர்ந்து மூளைக்கு வேலை கொடுப்பதால் அது சோர்வடைந்து விட, அதனால் தூக்கம் வந்து விடுகிறது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
அப்படியல்ல. ஒவ்வொரு நாளும் இரவு சோர்வாக இருக்கும் போது வேண்டுமானால் தூங்கலாம். மனது வைத்தால் விடிய விடிய விழித்திருக்கவும் முடியும். எனவே சோர்வடைவதால் நாம் தூங்க வில்லை. சோர்வடையாமல் இருக்கத்தான் தூங்குகிறோம்.
தூக்கமின்மையால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றித் தெரிந்து கொள்ள விஞ்ஞானிகள் வித்தியாசமானதொரு சோதனையை நடாத்தியிருக்கிறார்கள்.
200 மணி நேரம் ஒருவரைத் தொடர்ந்து விழித்திருக்கச் சொன்னார்கள். அதன் காரணமாக அவர் உடலில் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய்ந்தார்கள். இதன் பிறகு பன்னிரண்டு மணி நேரம் மட்டுமே இவர் தொடர்ந்து தூங்கியவுடன் 200மணி நேரம் கண்விழித்த காரணத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் எல்லாம் போய் உற்சாகமாகக் காணப்பட்டதைக் கண்டு பிடித்தார்கள்.
அடுத்து அதே பரிசோதனை ஒரு நாய்க்கும் செய்து பார்க்கப்பட்டது.
200 மணிநேரம் நாய் விழித்திருந்த போது நாயின் உடலைச் சோதனையிட்டதில் விஷக்கிருமிகள் வெளியேற்றும் ஒருவிதக் கழிவுப் பொருள் நாயின் இரத்தத்தில் பரவியது கண்டு பிடிக்கப் பட்டது. இந்தக் கழிவுப் பொருள் இரத்தத்தில் அதிகமானால் மூளையைப் பெருமளவு பாதித்து உயிருக்கே ஆபத்தாகி விடுகிறது. இந்தச் சோதனையை ஒரு கட்டத்தில் நிறுத்தி நாயை நன்றாகத் தூங்க விட்டால் ஆபத்து நீங்கி விடுவதும் கண்டு பிடிக்கப்பட்டது.
nantri - 101 Remedies for sound Restful Relaxation
அப்படியல்ல. ஒவ்வொரு நாளும் இரவு சோர்வாக இருக்கும் போது வேண்டுமானால் தூங்கலாம். மனது வைத்தால் விடிய விடிய விழித்திருக்கவும் முடியும். எனவே சோர்வடைவதால் நாம் தூங்க வில்லை. சோர்வடையாமல் இருக்கத்தான் தூங்குகிறோம்.
தூக்கமின்மையால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றித் தெரிந்து கொள்ள விஞ்ஞானிகள் வித்தியாசமானதொரு சோதனையை நடாத்தியிருக்கிறார்கள்.
200 மணி நேரம் ஒருவரைத் தொடர்ந்து விழித்திருக்கச் சொன்னார்கள். அதன் காரணமாக அவர் உடலில் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய்ந்தார்கள். இதன் பிறகு பன்னிரண்டு மணி நேரம் மட்டுமே இவர் தொடர்ந்து தூங்கியவுடன் 200மணி நேரம் கண்விழித்த காரணத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் எல்லாம் போய் உற்சாகமாகக் காணப்பட்டதைக் கண்டு பிடித்தார்கள்.
அடுத்து அதே பரிசோதனை ஒரு நாய்க்கும் செய்து பார்க்கப்பட்டது.
200 மணிநேரம் நாய் விழித்திருந்த போது நாயின் உடலைச் சோதனையிட்டதில் விஷக்கிருமிகள் வெளியேற்றும் ஒருவிதக் கழிவுப் பொருள் நாயின் இரத்தத்தில் பரவியது கண்டு பிடிக்கப் பட்டது. இந்தக் கழிவுப் பொருள் இரத்தத்தில் அதிகமானால் மூளையைப் பெருமளவு பாதித்து உயிருக்கே ஆபத்தாகி விடுகிறது. இந்தச் சோதனையை ஒரு கட்டத்தில் நிறுத்தி நாயை நன்றாகத் தூங்க விட்டால் ஆபத்து நீங்கி விடுவதும் கண்டு பிடிக்கப்பட்டது.
nantri - 101 Remedies for sound Restful Relaxation
Abonnieren
Posts (Atom)