Samstag, Juni 04, 2005

றேகனின் அந்த ஒரு பார்வை

இந்தப் புகைப்படத்தைக் காணும் போதெல்லாம் இனம் புரியாத சோகம் ஒன்று வந்து போகும். Alzheimer நோயினால் பீடிக்கப் பட்டு 5.6.2004இல் மரணமடைந்த அமெரிக்காவின் 40வது ஜனாதிபதியான Ronald Reagan இன் உடல் வைத்திருக்கும் பெட்டியில் முத்தமிட்டு வழியனுப்பிய, 83வயதுகள் நிரம்பிய நான்சி றீகனின் மனதில் எவ்வளவு வருத்தம் இருந்திருக்கும் என்பதை இந்தப் புகைப்படம் அப்படியே சொல்கிறது.

தான் யாரென்பதையே வருடக்கணக்காக மறந்து போயிருந்த Reagan இறக்கும் இறுதித் தறுவாயில் அவரது படுக்கையின் ஒரு பக்கம் அவரது பிள்ளைகளான Patty யும், Ronyயும் அமர்ந்திருக்க மறுபக்கம் நான்சி அமர்ந்திருந்தார்.

இறக்கும் அந்தத் தறுவாயில், மூடியிருந்த Reagan இன் விழிகள் நான்சியினை நோக்கி ஒரு கணம் திறந்து மூடியிருக்கிறது. "Reagan இன் அந்த ஒரு பார்வை எத்தனையோ அர்த்தங்களைக் கொண்டது. என் மீது கொண்ட அன்பின் நிமித்தம் தனது கண்களை, என்னை நோக்கித் திறந்து விடை பெற்றிருக்கிறார்" என்று Nancy Reagan சமீபத்திய தனது பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

52 வருடங்கள் இணைந்து வாழ்ந்த இவர்கள் அன்பு இறுக்கமானதாகத்தான் இருக்கும்.

4 Kommentare:

Mahamaya hat gesagt…

ரேகன் மிகுந்த நகைச்சுவை உணர்ச்சி கொண்டவர். அவருடைய ஜோக்குகள் "பஞ்ச்" கொண்டவை. ஒருமுறை ரேடியோவில் உரையாற்றுவதற்குமுன் மைக் "ஆன்" செய்யப்பட்டிருப்பது தெரியாமல் பெசியதை இங்கு கேட்கலாம்:

http://radio.about.com/library/reagan_bomb.mp3

"ஏதாவது நெருக்கடியாக இருந்தால் என்னை உடனே எழுப்பும்படி என் உதவியாளர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறேன். நான் மந்திரிசபை கூட்டத்தில் இருந்தாலும் சரி"

"நான் பார்த்தவரையில் கருச்சிதைவை ஆதரிப்பவர் அனைவரும் சிதைவடையாமல் பிறந்துள்ளவர்களே"

"கடின உழைப்பால் பாதிப்பு ஒன்றுமில்லை என்கிறார்கள். ஆனால் எதற்கு ரிஸ்க் எடுக்கவேண்டும்?"

"ஒரு நடிகர் எப்படி அதிபராகலாம்" என்ற கேள்விக்கு அவருடைய பதில்,"ஒரு அதிபர் ஏன் நடிகனாகக் கூடாது?"

Anonym hat gesagt…

/Reagan இன் அந்த ஒரு பார்வை எத்தனையோ அர்த்தங்களைக் கொண்டது. என் மீது கொண்ட அன்பின் நிமித்தம் தனது கண்களை, என்னை நோக்கித் திறந்து விடை பெற்றிருக்கிறார்" /
அவரின் அல்ஸைமர் நோயின்பின் அர்த்தம்??

Chandravathanaa hat gesagt…

வணக்கம் S.K
நீங்கள் தந்த றேகனின் பஞ்ச் நகைச்சுவைகள் மிகவும் ரசிக்கக் கூடியதாக இருந்தன.
நன்றி.

Chandravathanaa hat gesagt…

Confuzius

நாங்கள் பத்திரமாக இருந்துகொண்டு தற்கொடையாளர்களைப்
போற்றுவதில்லையா?


நாங்கள் பத்திரமாக இருப்பதால்தான் அவர்களின் தியாகம் புரிகிறது.