Donnerstag, Mai 19, 2005

விச ஊசியா? ஈரல் தானமா?


தீர்வு எப்படி அமையும்?


அமெரிக்க மரணதண்டனைக் கையாள்தலில் இதுவரை முன் வைக்கப் படாத ஒரு விண்ணப்பம்.

40வயது நிரம்பிய Gregory Johnson அமரிக்க சிறைக்கைதி. கொலைக் குற்றத்தின் காரணமாக, 1986ம் ஆண்டிலிருந்து சிறையிலிருக்கிறார். மே 25ந் திகதி அவருக்கான மரணதண்டனைக்காக விசஊசி காத்திருக்கிறது.

மரணத்துக்கான நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் ஒரு காலமும் இல்லாத ஒரு பிரச்சனை அவர் குடும்பத்தின் சார்பாக உருவாகியுள்ளது. கல்லீரல் வீக்கத்தினால் பாதிக்கப் பட்டிருக்கும் ஜோன்சனின் சகோதரிக்கு அவசரமாக ஒரு புதிய ஈரல் தேவைப் படுகிறது. தனது ஈரலை தனது சகோதரிக்குக் கொடுக்க ஜோன்சனும் விரும்புகிறார். அவரது ஈரல் சகோதரிக்குப் பொருந்தும் எனவும் வைத்தியர்கள் உத்தரவாதமளித்துள்ளனர்.

மரணதண்டனைக்காகக் காத்திருக்கும் இவரால் தனது ஈரலை தனது சகோதரிக்குத் தானம் செய்ய முடியுமா? சட்டம் அதற்கு அனுமதிக்குமா?

விசஊசி ஏற்றப்பட்டால் இவரது அனைத்து அவயவங்களும் செயலிழந்து விடும்.
இந்த இக்கட்டில் நீதிபதி என்ன முடிவு சொல்லப் போகிறார். நாளை வெள்ளி வரை காத்திருப்போம்.

Dienstag, Mai 17, 2005

அடையாளமா...? தொலைத்தாரா...?

2000 வருடங்களுக்கு மேல் பழமையான ஒரு தோற்சப்பாத்தை தென்மேற்கு பிரித்தானியாவில் உள்ள ஒரு சுரங்கப்பள்ளத்துக்குள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளார்கள். கிட்டத்தட்ட 30cm நீளமான, அதாவது தற்போதைய ஐரோப்பிய அளவில் 43-44 அளவுகளைக் கொண்ட இச்சப்பாத்து கிட்டத்தட்ட தற்போதைய சப்பாத்துக்கள் போலவே தைக்கப் பட்டு நூல் போட்டுக் கட்டுவதற்கான ஓட்டைகளுடன் காணப் படுகின்றது.

சுரங்கப்பள்ளத்துகள் தண்ணீர் நிறைந்திருந்த காரணத்தால் கிறிஸ்துவுக்கு முன் 700ம் ஆண்டிலிருந்து கிறிஸ்துவுக்குப் பின் 43ம் ஆண்டுக்குள்ளான காலத்தான என நம்பப் படுகின்ற சுரங்கப்பள்ளத்துள் இருந்த மரப்பொந்துக்குள் காணப்பட்ட இச்சப்பாத்து இன்னும் பழுதடையாமலே இருக்கிறது.

இச் சப்பாத்து ஒரு அடையாளமாக அம் மரப்பொந்தினுள் வைக்கப் பட்டதா அல்லது சப்பாத்துக்குரியவர் சேற்றிலே வழுக்கியதில் அச் சப்பாத்தைத் தொலைத்தாரா என்பது தெரியவில்லை.

Freitag, Dezember 10, 2004

எலிசபெத் ரெய்லர்

மரம் பழுத்தால் வெளவாலை வாவென்று கூவி இரந்தழைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு பெண்ணிடம் அழகும் இளமையும் இருக்கும் போது அவள் காலடியில் கூட விழத் தயாராக இருப்பார்கள் ஆண்கள்.

திரையுலக தேவதை எலிசபெத் ரெய்லர் இன்று தனிமையில் வாடுகிறார். அன்புக்காக ஏங்குகிறார். அவரது தோலில் சுருக்கங்கள் விழ ஆண்களும் அவரை விட்டுப் போய் விட்டார்கள்.

தற்போது 72வயதுகளைத் தொட்டிருக்கும் எலிசபெத் ரெய்லர், சமையற்கலைஞர், நடிகர், தயாரிப்பாளர், பாடகர், அரசியல்வாதி, கட்டிடத் தொழிலாளர் என சமூகத்தின் பல மட்டங்களிலும் இருந்தும் எட்டுத் தடவைகள், ஏழு ஆண்களைத் திருமணம் செய்து கொண்டார். எட்டுத் தடவைகள் விவாகரத்தும் செய்து கொண்டார். இதில் பிரித்தானிய நடிகர் ரிச்சர்ட் பற்றனை மட்டும் இரண்டு தடவைகள் திருமணம் செய்து கொண்டார்.

இவரது அழகும் பட்டுப்போன்ற கவர்ச்சியான சிரிப்பும் ஆண்களை இவரது காலடியில விழ வைத்தன. ஆனால் இன்று..? இந்த வயதில் தனிமை வந்திருக்கிறது. பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் நண்பர்கள் உறவுகள்.. என்று பலரும் அவரைச் சூழ்ந்திருந்தாலும் நெருக்கமாக இருந்து கண்ணீரைத் துடைத்து விடவோ, அணைத்துக் கொள்ளவோ வாழ்க்கைத் துணையென்ற ஒன்று, இன்று அவருக்கு இல்லை.

இவரது இன்றைய நெருங்கிய நண்பன் இவர் வளர்க்கும் 12வயது நிரம்பிய சிறிய வகை நாய் ஒன்றே. இவரது படுக்கையின் ஒரு தலையணையில் உரிமையுடன் படுதுத்துறங்கும் அந்த நாயின் பெயர் சுகர்.

உடல் தளர்ந்து முகத்தில் சுருக்கங்கள் விழுந்து தளர்ந்து போயிருக்கிறார். இதயம் பலவீனப்பட்டு இருக்கிறது. முதுகெலும்பு வளைந்து நின்று முதுமையை அப்பட்டமாகச் சொல்கிறது. ஓடித் திரிந்த கால்கள் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாமல் பலமிழந்து நிற்கின்றன. இவரைச் சுற்றி வைத்தியர்கள் எப்பொழுதும் இருக்கிறார்கள். ஆனாலும் இவரால் முதுமையை மட்டும் வெல்ல முடியவில்லை.

இருந்தாலும் "மிக அழகிய இனிமையான நினைவுகள் என்னிடம் உள்ளன.
அந்த நினைவுகளே முதுமையை வெல்ல எனக்குப் போதும்." என்கிறார் எலிசபெத் ரெய்லர்.

சந்திரவதனா
2.12.2004

Montag, November 29, 2004

Fred Hale Senior தனது 113வது வயதில் இறந்து விட்டார்.

உலகிலேயே அதிக வயதான ஆண் Fred Hale Senior தனது 113வது வயதில் இறந்து விட்டார்.

இவர் 1890ம் ஆண்டு மார்கழி மாதம் 1ந் திகதி Maine இல் பிறந்தார். 5.3.2004 இல் கின்னஸ் புத்தகத்தில் உலகில் அதி கூடிய வயதான ஆண் என்ற இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

109வயது வரை தான் பிறந்த நகரிலேயே வாழந்து வந்த இவர், அதன்பின் தனது மகன் வாழும் நியூயோர்க்கில் உள்ள Dewitt க்கு இடம் மாறியிருந்தார்.

அங்கு நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக தனது 114வது பிறந்தநாளுக்கு 12 நாட்கள் முன்பாக 19.11.2004 அன்று, நித்திரையிலேயே இறந்து விட்டார்.

தற்போதைய அதி கூடிய வயதான ஆண் மனிதர் Hermann Dörne. இவர் யேர்மனியின் Düsseldorf நகரில் வசிக்கிறார். இவருக்கு வயது 111.
ஆனால் இதே வயதில் இன்னும் 26 பெண்கள் வாழ்கிறார்கள் என நியூயோர்க்கைச் சேர்ந்த முதுமை பற்றிய ஆராய்ச்சிக்குழு அறியத் தந்துள்ளது.

Donnerstag, Oktober 28, 2004

எறும்பு போல் சுறுசுறுப்பாய்...?


எறும்புகள் மிகவும் சுறுசுறுப்பானவை எனத்தான் நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

அப்படியில்லையென Biologe pro.Jurgen Heinz அடித்துக் கூறுகிறார்.

எறும்புகள் ஐந்து நிமிடங்கள் வேலை செய்தால் 25 நிமிடங்கள் ஓய்வெடுக்கின்றனவாம். அவரது ஆராய்சியின் படி, மனிதர்களை விட எறும்புகள் குறைவாகத்தான் வேலை செய்கின்றனவாம்.

- தகவல் - HT-Schwaebisch Hall 15.7.1999 -

எனது கருத்து :
இனி யாரும் யாருக்கும் சொல்லாதீர்கள்
"எறும்பு போல் சுறுசுறுப்பாய் இரு" என்று

Donnerstag, Mai 20, 2004

குழந்தை விரைவில் கதைக்கத் தொடங்குவதற்கு

ஓரு குழந்தை விரைவில் கதைக்கத் தொடங்குவதற்கும், கதைக்கப் பிந்துவதற்கும் குழந்தையின் புத்திசாலித்தனம் காரணமல்ல என அமெரிக்க Yale பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Steven Reznik கூறுகிறார்.

ஓரு குழந்தை விரைவில் கதைக்கத் தொடங்குவதற்கும், கதைக்கப் பிந்துவதற்கும் காரணம்
ஒன்று - பரம்பரை
இரண்டாவது - தாய் தந்தையர்
என அவர் கூறுகிறார்.

தாய் தந்தையர் பிள்ளையுடன் எவ்வளவு தூரம் கதைக்கிறார்களோ அவ்வளவு விரைவில் பிள்ளைகள் கதைக்கத் தொடங்குவார்களாம்.

(Fuer Sie என்ற யேர்மனிய மாதசஞ்சிகையிலிருந்து)

Dienstag, Mai 18, 2004

Cartoon எப்படி வந்தது..?

இன்று பத்திரிகைகளில் வரும் Cartoon (கேலிச்சித்திரம்) எப்படி வந்தது என்று தெரியுமா?

இத்தாலி மொழியில் Cartoon என்பது கெட்டியான காகிதத்தைக் குறிக்கும்.
கெட்டியான காகிதங்களில் தான் அப்போது அங்கே ஓவியங்கள் வரைவார்கள்.

1921 ம் ஆண்டில் பிரிட்டனின் புதிய பாராளுமன்றக் கட்டடத்தை அலங்கரிக்க ஓவியர்களிடையே போட்டி ஒன்று நடாத்தப் பட்டது. அந்தப் போட்டிக்காக (கெட்டியான காகிதங்களில்) வரையப் பட்ட பல ஓவியங்கள் நிராகரிக்கப் பட்டன.

கேலிச் சித்திரங்கள் போன்று இருந்த - நிராகரிக்கப் பட்ட சில ஓவியங்களை பஞ்ச் என்ற பத்திரிகை ஒன்று பஞ்ச் Cartoon என்ற தலைப்பில் ஒவ்வொன்றாகப் பிரசுரித்தது.

காலப் போக்கில் இவ்வித கேலிச்சித்திரங்களுக்கு Cartoon என்ற பெயர் நிலைத்து விட்டது.

Dienstag, Mai 11, 2004

கர்ப்பிணியா இல்லையா..? கண்டு பிடிக்க ...!

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே - ஒரு பெண் கர்ப்பிணியா இல்லையா என்பதைக் கண்டு பிடிக்க எகிப்தியர்கள் கையாண்ட சில சுவாரஷ்யமான முறைகள்.

1 - கோதுமை அல்லது பார்லி தானியத்தின் மீது சம்பந்தப் பட்ட பெண்ணையும்
அவள் கணவனையும் சிறுநீர் கழிக்கச் சொல்லுவார்கள். பெண்ணினுடைய
தானியம் முதலில் முளை விட்டால் அவள் கர்ப்பிணி என்று உறுதி
செய்வார்கள்.

2 - ஒரு சிறிய நாடாவைக் கொளுத்தி அதைப் பெண்ணின் மூக்கினருகே
கொண்டு செல்வார் மருத்துவர். எரியும் நாற்றம் தாங்காமல் அந்தப் பெண்
மயங்கி விழுந்தால் அவள் கர்ப்பிணி என்று முடிவு கட்டுவார்.

3 - கர்ப்பிணிச்செடி என்று பெயரிட்டு ஒரு தாவரத்தை வளர்த்து வந்தனர். சில
எகிப்திய மருத்துவர்கள். மாலையில் இந்தச் செடி மீது கர்ப்பிணிப் பெண்
சிறுநீர் கழிக்க வேண்டும். காலையில் செடி வாடாமல் இருந்தால் அவள்
கர்ப்பிணி என்பது உறுதி!

இந்தச் சோதனையை விளக்கும் அந்தக் காலத்துக் கையெழுத்துப் பிரதி இன்றும் லண்டன் மியூசியத்தில் உள்ளதாம்.

Mittwoch, Mai 05, 2004

பொங்கல் வாழ்த்து

பொங்கல் வாழ்த்து அனுப்பும் வழக்கம் 1928ம் ஆண்டு அறிஞர் பெரியசாமித் தூரனால் ஏற்படுத்தப்பட்டது. அவர் பனங்குருத்து ஓலைகளை நறுக்கி, திரு.வி.க, கல்கி போன்றவர்களுக்கு பொங்கல் வாழ்த்தை அனுப்பி வைத்தார்.
திரு.வி.க அவர்கள் தமது நவசக்தி நாளேட்டில் அதை வெளியிட்டு
இது போல் அனைவரும் பொங்கல் வாழ்த்தை தயாரித்து அனுப்புங்கள்
என்று கேட்டுக் கொண்டார்.

கல்கண்டு இதழிலிருந்து
சந்திரவதனா.

Dienstag, April 27, 2004

கறுப்பு விதவை

ஏறக்குறைய 1செ.மீ அளவுள்ள பெண்சிலந்தி ஒன்றுக்கே இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. கறுப்பு நிறம் கொண்ட இச்சிலந்தியின் முதுகில் பல்வேறு எண்ணிக்கையில் சிவப்புப் புள்ளிகள் காணப்படும்.

இவை அமெரிக்காவில், வெப்பம் சூழ்ந்த இடங்களிலும், புற்கள், புதர்கள் நிறைந்த இடங்களிலும், சோளப்பண்ணைகளிலும், மனிதநடமாட்டமில்லாத பாழடைந்த வீடுகளிலுமே பெரும்பான்மையாகக் காணப்படுகின்றன.

தன்னைவிட 5மடங்கு பருமனான உயிரினத்தை ஒரேநேரத்தில் உண்ணக்கூடிய சக்தியை இச்சிலந்தி கொண்டுள்ளது. இது மனிதர்களுக்குக் கடித்தால், பத்திலிருந்து இருபது நிமிடங்களுக்குப் பின்னரே மனிதர்கள் இதன் வலியை உணர்ந்து கொள்வார்கள்.
இதனுடைய நச்சுத்தன்மை உடலில் பரவுவதால் செங்குருதிச் சிறுதுணிக்கைகள் பாதிக்கப்படுகின்றன. இதனால் கடுமையான வலி உண்டாகி ஒருவித பய உணர்வு ஏற்படும்.
சிலர் இச்சிலந்தி கடித்ததால் இரத்தத்தில் நச்சுத்தன்மை ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர்.

இவ்வகைச் சிலந்திகள் உடல் உறவு கொண்டபின் பெண்சிலந்தி ஆண்சிலந்தியைக் கொன்று தின்றுவிடும். எனவேதான் இக்கறுப்பின சிலந்திகளுக்கு கறுப்பு விதவை எனப் பெயர் வந்தது.

Montag, März 22, 2004

விளம்பரத் துறை

முதன் முதல் விளம்பர நோட்டீஸ் ஒட்டியவர்கள் ஜேர்மனியர்கள். 1466 ம் ஆண்டு தெருச்சுவர்களில் விளம்பர நோட்டீஸ்களை ஒட்டி விளம்பரத் துறையை ஆரம்பித்து வைத்தார்கள். 1786 ம் ஆண்டு வில்லியம் ரெய்லர் என்ற இங்கிலாந்தைச் சேர்ந்தவரால் விளம்பரக் கொம்பனி முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டது. 1941 ஜுலை 1 ம் திகதி முதல் விளம்பரம் தொலைக் காட்சியில் காட்டப்பட்டது. காட்டப்பட்ட பொருள் கை மணிக்கூடு.

Samstag, März 20, 2004

நாய்தான் நமக்கு சீனியர்.

நாய்தான் அழகுப் போட்டியில் நமக்கு சீனியர்.
முதல் முதல் அழகுப் போட்டி நாய்களுக்கிடையில் 1859 ம் ஆண்டு பிரித்தானியாவில் நடைபெற்றது.
அதற்குப் பிறகு 29 ஆண்டுகள் கழித்துத்தான் மனிதர்களுக்கிடையிலான அழகுப் போட்டி பற்றிய எண்ணம் யாருக்கோ வந்தது.
முதல் முதலாக மனிதர்களுக்கிடையிலான அழகுப் போட்டி 1988 இல் பெல்ஜியத்தில் நடைபெற்றது.

Freitag, März 19, 2004

புகையிலைக் காற்றை முதல் சுவாசமாக...

குழந்தை இறந்து விட்டதாக எண்ணி அதை அப்படியே கிடத்தி விட்டுப் போய் விட்டாள் மருத்துவத்தாதி.

நெருங்கிய உறவினரான மருத்துவர் - சுருட்டுப்பிரியர் - நம்பிக்கை இழக்காமல் குழந்தையின் வாயில் தனது வாயை வைத்து மூச்சைப் பலக்க ஊதினாரோ இல்லையோ குழந்தை பிழைத்துக் கொண்டது.

புகையிலைக் காற்றை முதல் சுவாசமாக இழுத்துப் பிறந்த அந்தக் குழந்தைதான் - பிக்காஸோ என்ற modernart மேதை.

Sonntag, Februar 08, 2004

Mit Hausmitteln schnell gesunden

Erkältung
Gegen Kopfschmerz und Triefnase muss schnelle Hilfe her: Den Gang zum Arzt können Sie sich mit der Anwendung von Hausmitteln jedoch häufig sparen. Tipps für alle, die schnell wieder genesen möchten.

Wadenwickel und heiße Milch mit Honig sind vielen noch aus Kindertagen in Erinnerung. Heute stehen die alten Hausmittel gegen Erkältung und Grippe wieder hoch im Kurs. Die Vorteile: Sie sind einfach aber effektiv, sie haben keine Nebenwirkungen, und vor allem sind sie deutlich preiswerter als Mittel aus der Apotheke. Vor allem bei Erkältungen mit Schnupfen, Kopf- und Gliederschmerzen sind Hausmittel die richtigen Maßnahmen. Sind Fieber & Co. jedoch nach einigen Tagen noch nicht abgeklungen, sollte man vorsichtshalber zum Arzt gehen.

Wickel und andere Sofortmaßnahmen
Ein altbewährtes Mittel gegen Erkältungen sind verschiedene Wickel. Wadenwickel beispielweise senken das Fieber, Brustwickel helfen bei fieberhafter Bronchitis und bei Lungen- und Rippenfellentzündungen, Halswickel bei akuten Halsentzündungen. Den Genesungsprozess bei Erkältungen beschleunigen außerdem ätherische Öle auf Basis von Eukalyptus, Lavendel oder Zedernholz, die eingeatmet werden. Das Kratzen im Hals kann mit Gurgeln einer Salzlösung gemildert werden. Wichtig ist außerdem: Warme und frische Luft in den Räumen, die durch Wasserschalen oder nasse Tücher auf den Heizkörpern eine ausreichende Luftfeuchtigkeit erzielt.

Quelle - ratgeber.ARD.de

Freitag, Oktober 31, 2003

வெங்காயம் உங்கள் காதலி!

பசுமையான காய்கறிகள், பழங்கள், பருப்புகள் ஆகியவை புற்றுநோயை தடுப்பது மட்டுமல்ல, குணப்படுத்தும் என்று மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். வெங்காயத்தை நாம் சாதாரணமாக நினைக்கிறோம். அவ்வப்போது வெங்காயத்தைச் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. புற்றுநோய் வருவதற்கு காரணமான Carcinogen என்கிற மூலப் பொருளை எதிர்த்துப் போராடும் சக்தி வெங்காயத்திற்கு அபரிமிதமாக உண்டு. அதே போல பூண்டுக்கு கேன்சரை விரட்டும் சக்தி உண்டு. சோயா பீன்ஸ், சோயா மில்க், சோயா மாவு இவை எல்லாவற்றிலுமே கார்ஸினோஜினை நுழையாமல் தடுத்து நிறுத்தும் வல்லமை உள்ளது. மார்பகப் புற்று நோயுள்ளவர்களுக்கு முட்டைக் கோஸ், காலிஃப்ளவர் ஆகிய காய்கறிகளைச் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்வது நல்லது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம், நம்முடைய இந்தியன் ஸ்டைலில் மிக அதிகமாக வேக வைக்கக் கூடாது. வெளிநாட்டு உணவு போல பச்சையாகவோ அல்லது மிதமாக வேக வைப்பது சிறந்தது. பப்பாளிப்பழம், மாம்பழம், செர்ரி பழங்கள், பிளம்ஸ், தர்பூசனி ஆகிய பழங்களை ரெகுலராகச் சாப்பிடுவது கேன்சர் நோயாளிகளுக்கு நல்லது.

nantri-Kumutham

Samstag, Oktober 04, 2003

தூக்கம் பற்றிய சில தகவல்கள்

நாள் முழுவதும் தொடர்ந்து மூளைக்கு வேலை கொடுப்பதால் அது சோர்வடைந்து விட, அதனால் தூக்கம் வந்து விடுகிறது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
அப்படியல்ல. ஒவ்வொரு நாளும் இரவு சோர்வாக இருக்கும் போது வேண்டுமானால் தூங்கலாம். மனது வைத்தால் விடிய விடிய விழித்திருக்கவும் முடியும். எனவே சோர்வடைவதால் நாம் தூங்க வில்லை. சோர்வடையாமல் இருக்கத்தான் தூங்குகிறோம்.

தூக்கமின்மையால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றித் தெரிந்து கொள்ள விஞ்ஞானிகள் வித்தியாசமானதொரு சோதனையை நடாத்தியிருக்கிறார்கள்.
200 மணி நேரம் ஒருவரைத் தொடர்ந்து விழித்திருக்கச் சொன்னார்கள். அதன் காரணமாக அவர் உடலில் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய்ந்தார்கள். இதன் பிறகு பன்னிரண்டு மணி நேரம் மட்டுமே இவர் தொடர்ந்து தூங்கியவுடன் 200மணி நேரம் கண்விழித்த காரணத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் எல்லாம் போய் உற்சாகமாகக் காணப்பட்டதைக் கண்டு பிடித்தார்கள்.
அடுத்து அதே பரிசோதனை ஒரு நாய்க்கும் செய்து பார்க்கப்பட்டது.
200 மணிநேரம் நாய் விழித்திருந்த போது நாயின் உடலைச் சோதனையிட்டதில் விஷக்கிருமிகள் வெளியேற்றும் ஒருவிதக் கழிவுப் பொருள் நாயின் இரத்தத்தில் பரவியது கண்டு பிடிக்கப் பட்டது. இந்தக் கழிவுப் பொருள் இரத்தத்தில் அதிகமானால் மூளையைப் பெருமளவு பாதித்து உயிருக்கே ஆபத்தாகி விடுகிறது. இந்தச் சோதனையை ஒரு கட்டத்தில் நிறுத்தி நாயை நன்றாகத் தூங்க விட்டால் ஆபத்து நீங்கி விடுவதும் கண்டு பிடிக்கப்பட்டது.
nantri - 101 Remedies for sound Restful Relaxation

Sonntag, September 14, 2003

Antibiotika nicht mit Milchprodukten einnehmen

dpa - Meldung vom 12.09.2003 12:27 Uhr

Während der Einnahme von Antibiotika sollte auf den Verzehr von Milchprodukten verzichtet werden. Die Medikamente könnten mit dem in Milch enthaltenen Kalzium Verbindungen eingehen, die der Körper nicht aufschließen kann, warnt die Techniker Krankenkasse in Hannover.

Dadurch könne sich die Wirkung der Arzneien reduzieren. Kalziumhaltige Lebensmittel sollten daher frühestens wieder zwei Stunden nach Einnahme des Antibiotikums verzehrt werden.

Problematisch kann den Angaben zufolge auch der Genuss von Grapefruitsaft in Kombination mit Medikamenten werden. Der Saft könne zum Beispiel den Abbau blutdrucksenkender Präparate im Körper verhindern, wodurch sich ihre Wirkung erheblich verstärkt. Von rund 50 000 Medikamenten sei bekannt, dass sie mit Lebensmitteln reagieren. Die Krankenkasse rät daher, vor der Medikamenteneinnahme immer den Beipackzettel zu lesen, um Wechselwirkungen auszuschließen.

Quelle-Google.de

Joghurt-Tampon gegen Scheideninfektionen

veröffentlicht am 12.09.03 - 14:42

Neu-Isenburg (rpo). Viele Frauen haben von Zeit zu Zeit mit lästigen Scheideninfektionen zu kämpfen. Diesem Übel kann mit einem einfachen Hausmittel der Garaus gemacht werden.
So rät der Dresdner Gynäkologe Martin Link in der "Ärzte-Zeitung", einen handelsüblichen Tampon in zuckerfreien Naturjoghurt mit Laktobakterien zu tauchen und über Nacht in der Scheide zu platzieren. Dies müsse vier bis fünf Tage lang wiederholt werden, um die Infektion effektiv zu bekämpfen.

Das Waschen mit einer ph-neutralen Intimwaschlotion verhindere zudem eine Rückkehr der Infektion und halte die Scheidenflora im Gleichgewicht.

Auch regelmäßige Kuren mit Milchsäurezäpfchen und Vitamin-C-Vaginaltabletten könnten das Scheidenmilieu in Schach halten. Die Zäpfchen- und Tabletten-Kur solle alle drei bis vier Monate für sieben bis zehn Tage angewandt werden.

Quelle-Google.de

Sonntag, August 31, 2003

Bitterschokolade schützt das Herz

Schokolade ist gesund - zumindest die bittere Variante. Wie italienische und britische Forscher beobachtet haben, steigt nach dem Genuss von dunkler Schokolade der Gehalt so genannter Antioxidantien im Blutplasma. Diese Stoffe schützen das Herzkreislaufsystem.

Das Verschlingen von Milchschokolade lasse sich mit dieser positiven Wirkung allerdings nicht rechtfertigen, berichten die Wissenschaftler im Fachblatt «Nature» (Bd. 424, S. 1013): Milch hebt den herzschützenden Effekt dunkler Schokolade wieder auf.

Unter wissenschaftlicher Aufsicht naschten zwölf Freiwillige entweder Bitterschokolade, Milchschokolade oder Bitterschokolade zusammen mit einem Glas Milch. Eine Stunde später maßen die Forscher um Mauro Serafini vom Institut für Ernährungsforschung in Rom die antioxidative Wirkung des Blutplasmas der Probanden. Ergebnis: Im Blut der Bitterschokoladen-Tester war sie um fast 20 Prozent angestiegen. Unter anderem hatten die Probanden dieser Gruppe deutlich mehr Epicatechin im Blut, einen Vertreter aus der Gruppe der Antioxidantien.

Die nachteiligen Effekte der Milch erklären die Forscher damit, dass sich die Milchproteine möglicherweise mit den antioxidativ wirkenden Flavonoiden der Schokolade verbinden. Diese seien dann für den Körper nicht mehr zugänglich. Antioxidantien neutralisieren im Körper zellschädigende Sauerstoffmoleküle, so genannte freie Radikale. Sie wirken somit als «Radikalfänger».

Quelle - Yahoo.de

Zu viel Fruchtsaft kann Durchfall auslösen

Zu viel Fruchtsaft kann bei Kindern zu Durchfall führen. Ursache ist meist eine so genannte Fruktosemalabsorption, wie der Kinderarzt Michael Lentze vom Uniklinikum Bonn in der «Ärzte-Zeitung» berichtet. Dabei funktioniere im Darm das Transporteiweiß für Fruktose GLUT-5 nicht richtig. Die über den Fruchtsaft eingenommene große Fruchtzuckermenge überfordere das Protein, so dass es im Dünndarm nur unzureichend abgebaut werden könne.

Laut Lentze haben etwa fünf Prozent der Bevölkerung

ein schwaches Fruktosetransportprotein. «Erwachsene sprechen aber seltener über ihre Beschwerden und trinken auch nicht literweise Apfelschorle», sagt der Kinderarzt. Bei der Fruktosemalabsorption werde der Fruchtzucker schließlich im Dickdarm bakteriell abgebaut, so dass Methangas und Wasserstoff entstünden.

Da der Wasserstoff relativ schnell ausgeatmet werde, könne mit einem einfachen Atemtest die Störung diagnostiziert werden. Liege eine Fruktosemalabsorption vor, müsse aber nicht generell auf Früchte und Obstsaft verzichtet werden, betont Lentze. Obst wie saure Kirschen, Ananas, Apfelsinen, Bananen und Grapefruit könnten gut vertragen werden. Bei Äpfel sei dagegen Vorsicht angesagt.

Quelle - Yahoo.de